நல்லதோர் வீணை செய்தே

நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

‘நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?’ - பாரதியின் ‘தோத்திரப் பாடல்கள்’ என்னும் கவித்தொகுப்பில் ‘கேட்பன’ என்னும் தலைப்பில் அமைந்த இந்தப் பாடல் சிவசக்தியை வணங்கி ஆற்றலும், நன்மனமும், மன உறுதியும் பெற வேண்டி நெஞ்சுருகப் பாடும் அருங்கவிதை.

மேலும் படிக்கநல்லதோர் வீணை செய்தே
22 Comments

காக்களூர் வீர ஆஞ்சநேயர் பதிகம்

காக்களூர் வீர ஆஞ்சநேயர் பதிகம் கவிதை : இமயவரம்பன் பாவகை : அறுசீர் ஆசிரிய விருத்தம் Sri Kaakkalur Veera Anjaneyar Pathigam 1. கடற்பரப் பினைக்க டந்து... கடிநகர் கெடக்க டிந்து படைபொரு(து) இகல்க டந்த... பாதமே புகழ்ந்து நின்றேன்வடிவுயர் ஆஞ்ச…

மேலும் படிக்ககாக்களூர் வீர ஆஞ்சநேயர் பதிகம்
0 Comments

குறள் விருத்தம் – திருக்குறள் பொருள் விளக்கம்

அறத்துப்பால் - கடவுள் வாழ்த்து குறள்பா - 1 :அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. விளக்க விருத்தம் (அறுசீர் ஆசிரிய விருத்தம்) :அகரம் என்னும் ஓரெழுத்தாம்   அறிவை விரிக்கும் சீரெழுத்தாம்திகழும் எழுத்துத் திரட்கெல்லாம்    திலகம் அனைய முதலெழுத்தாம்புகழும் அகர எழுத்தினைப்போல்   புவிக்கோர் இறைவன்…

மேலும் படிக்ககுறள் விருத்தம் – திருக்குறள் பொருள் விளக்கம்
0 Comments

வண்ணப்படமும் வெண்பாவும்

1. வான்கதிரை வாங்கும் மரங்கள் மரங்களெலாம் கூடி விரிகதிரை வாங்கநெருங்கினவோ தம்முயர்கை நீட்டிப் - பெருங்காட்டின்வல்லிருளில் வாடி வளரொளியைத் தேடுகின்ற புல்லினுக்கும் சேர்க்கும் பொருட்டு. கருத்து: கானகத்தின் காரிருளில் ஒளி தேடும் புல் போன்ற சிறு தாவரங்களுக்கு ஒளியினைச் சேர்க்கத்தான் இம்மரங்கள் ஒன்று…

மேலும் படிக்கவண்ணப்படமும் வெண்பாவும்
2 Comments

வடமதுரை உதித்தான் – கண்ணன் பாட்டு

வடமதுரை உதித்தான் - கண்ணன் பாட்டு கவிதை : இமயவரம்பன்பாவகை : எழுசீர் ஆசிரிய விருத்தம் 1. அன்பினால் நினைவார்க்(கு) அமுதினும் இனியான்... அணிமயில் சிற(கு)ஒளிர் சிகையான்மின்னுமா மணிபோல் திலகவாள் நுதலான்... மிளிர்குழை திகழ்தரு செவியான்இன்(பு)எலாம் நிறைக்கும் குழல்அமர் இதழான்... என்(பு)எலாம்…

மேலும் படிக்கவடமதுரை உதித்தான் – கண்ணன் பாட்டு
0 Comments

கணபதி பஞ்சகம் – ஶ்ரீ விநாயகர் துதிப்பாடல்கள்

கணபதி பஞ்சகம் - ஶ்ரீ விநாயகர் துதி கவிதை : இமயவரம்பன் பாவகை : தரவு கொச்சகக் கலிப்பா Sri Ganapathi Panchagam 1. கணபதியின் கழல்பணியக் கடுவினைகள் கழன்றொழியும்கணபதியின் அருள்நினையக் கமலமென மனம்விரியும்கணபதியின் புகழ்செவியில் கலந்திடவுட் குழைந்துருகும்கணபதியின் பெயர்மொழியக் கனிவுறுசெங்…

மேலும் படிக்ககணபதி பஞ்சகம் – ஶ்ரீ விநாயகர் துதிப்பாடல்கள்
0 Comments

சமய சமரச விருத்தம் – கடவுள் வாழ்த்துப் பாடல்கள்

தில்லை அம்பலத்தில் எடுத்த பொன்னடி - சிவ வணக்கம் அடர்புல னறிவால் அளப்பரும் பொருளென்    றமரரும் முனிவரும் அரற்றப்படரழற் சடைதான் நெடுவிசும் பணவப்    பறையொலித் துலக(ம்)நின் றிசைக்கக்கடல்கிளர்ந் திரைக்கக் காற்றுழன் றெழும்பக்    கடுவிட மிடறுடைக் கடவுள்நடமிடப் பொதுவில்…

மேலும் படிக்கசமய சமரச விருத்தம் – கடவுள் வாழ்த்துப் பாடல்கள்
0 Comments

ஏனமாய் எழுந்தான் – ஶ்ரீ வராக அவதாரத் துதி

திருமாலின் வராக அவதாரத்தைப் போற்றும் துதிப்பாடல். பாவகை : அறுசீர் ஆசிரிய விருத்தம் திங்க ளோடொரு விரிகதிர் உடுபொழி    திசையொளி யதைமறைக்கும்பொங்கு வல்லிருட் பகையது மடிந்திடப்    புவியினை இடந்தெடுப்பான்சங்கி னோடுசக் கரமொரு கதையினைத்    தரித்திடும் அருந்திறலோன்செங்கண் ஏனமென் றெழுந்திரு நிலமிசை    திருவருள் பொழிந்தனனே! பதம் பிரித்து: திங்களோடு…

மேலும் படிக்கஏனமாய் எழுந்தான் – ஶ்ரீ வராக அவதாரத் துதி
0 Comments

வையத் தலைமையும் வேண்டேன் – Shakespeare’s Sonnet 29 – தமிழாக்கம்

ஆங்கில மகாகவி ஷேக்ஸ்பியர் எழுதிய 'When in disgrace' (Sonnet 29) என்னும் கவிதையின் தமிழாக்கம். வையத் தலைமையும் வேண்டேன்  (சிந்துப்பாடல் - ஆனந்தக் களிப்பு மெட்டு) தாழ்வுற்(று) உளம்தான் தளர்ந்தேன் - ஒரு     தகவற்(று) இழிவுறத் தான்வீழ்ந்(து) உழந்தேன்ஊழ்வினை தன்னைப்…

மேலும் படிக்கவையத் தலைமையும் வேண்டேன் – Shakespeare’s Sonnet 29 – தமிழாக்கம்
0 Comments

குன்றென உயர்வோம் – The Hill We Climb – A Translation

அமெரிக்க ஜனாதிபதி பைடன் அவர்களின் பதவியேற்பு விழாவில் பேசிய கறுப்பினக் கவிஞர் அமாண்டா கோர்மன் (Amanda Gorman) அவர்களின் ‘The Hill We Climb’ என்னும் கவிதையின் தமிழாக்கம். The Hill We ClimbEnglish Original : Amanda Gormanகுன்றென உயர்வோம்தமிழாக்கம்…

மேலும் படிக்ககுன்றென உயர்வோம் – The Hill We Climb – A Translation
0 Comments