பாரதி வெண்பா மாலை என்னும் இந்தக் கவிதைத் தொகுப்பில் மகாகவி பாரதியாரைப் போற்றும் கவிதைகள் ‘நேரிசை வெண்பா’ என்னும் பாவகையில் அந்தாதியாக மிளிர்கின்றன.
பாரதியைப் பற்றிப் பாடுவதற்கு ஏன் வெண்பாவைத் தேர்ந்தெடுத்தேன் என்றால், வெண்பாவுக்கும் பாரதிக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. பாரதியைப் போல் வெண்பாவுக்கும் ஒரு மிடுக்கான நடையுண்டு; அறிவுறுத்தும் பாங்குண்டு; நேர்கொண்ட போக்குண்டு. நேரிசை வெண்பாவின் தனிச்சொல் தான் அதன் முத்திரையாக அமைந்து கவிதைக்கு அரசியாக அதை உயர்த்துகிறது. அதேபோல் யாரிடமும் காண முடியாத ஒரு புதுமைத்துவத்தைப் பாரதியிடம் நாம் காண்பதால் படிப்பவர் நெஞ்சில் உயர்ந்து நவீன யுகத்தின் நற்கவிஞராகத் திகழ்பவர்; ஆன்ம ஞானி , வேதாந்தி, சித்தர், கர்ம யோகி என்று போற்றப்படுபவர்; தெளிந்த அறிவும் தீர்க்க தரிசனமும் கொண்ட செந்தமிழ்க் கவிஞர்.
பாரதி வெண்பாக்கள் பல இயற்றியுள்ளார். அவர் எழுதிய வெண்பாக்களில் எனக்கு மிகவும் பிடித்தது ‘இன்மழலைப் பைங்கிளியே’ என்னும் பாரதமாதா புகழ் வெண்பாவே.
நன்மையுற வாழும் நகரெதுசொல் – சின்மயமே
நானென் றுணர்ந்த நனிபெரியோர்க் கின்னமுது
தானென்ற காசித் தலம்.
பாரதி வெண்பா மாலை என்னும் இந்தக் கவிதைத் தொகுப்பில், மகாகவி பாரதியாரின் எழுத்தின் சிறப்பையும் நேர்கொண்ட சிந்தனையையும் போற்றி எழுதியுள்ளேன். இந்தப் பாடல்கள் அந்தாதித் தொடையில் அமைந்த வெண்பாக்களைக் கொண்டு ஒரு மாலையாகத் தொடுத்து யாக்கப்பட்டுள்ளதைக் காணலாம். பாரதி வெண்பா மாலையையென்னும் பாரதியார் புகழ்பாடும் கவிதைகளை தமிழ் அன்னையின் தவப்புதல்வனுக்கு அணிவிப்போம் வாருங்கள்.
பாரதி வெண்பா மாலை
Bharathi Venba Maalai
இருதயத்தில் பொங்கும் இரக்கம் – உருகவரும்
ஊக்கமிகு வாய்ச்சொல் முழங்கிடும்சீர்ப் பாரதியாம்
மாக்கவியை நெஞ்சமே வாழ்த்து.
1
(சிறுமை கண்டு பொங்கி) தீப்பறக்கும் கண்கள், எழுச்சியூட்டும் எழுத்துக்கள், அன்பு தங்கும் இதயம், மனத்தை உருக்கி ஊக்கம் பெருக்கி முழங்கும் பேச்சு – என்று பலச் சிறப்புகள் மிகுந்த பாரதி என்னும் பெருங்கவிஞனை, என் நெஞ்சமே வாழ்த்துவாயாக.
Fiery eyes that frowns upon mediocrity,
Elegant words, Compassionate heart,
Heart-Melting speech that inspires and motivates the mind – these are the attributes of the great poet Bharati. O mind, let us pay Salutations to the Mahakavi.
தாழ்த்தித் தலைவணங்கும் தார்த்தலைவன் – ஆழ்த்தி
அறங்கொல்லும் காலன் அரண்டோடச் செய்யும்
திறங்கொண்ட செல்வன் சிறப்பு.
2
பல்கலை அறிவில் வல்லவர்கள் எல்லாம் தம் தலை தாழ்த்தி வணங்கக்கூடிய புகழ்மாலை அணிந்த தலைவன் பாரதி. அதுமட்டுமல்லாமல், துயரத்தில் ஆழ்த்தி தர்மத்தைச் சாய்க்கும் காலனையே உதைத்துத் தள்ளி அவனை அரண்டு ஓட விரட்டிய வீரன் அவன். அத்தகைய அறிவிலும் துணிவிலும் புகழிலும் சிறந்த பாரதியின் பெருமையை நாம் வாழ்த்திப் பாடிடுவோம், வா, நெஞ்சே!
O Mind,
Let us shower our praises on Bharati, to whom even the learned scholars bow down in reverence,
And who was courageous enough to vanquish Yama
The unjust God of Death.
சிறப்பன்றோ பாட்டின் தெளிவு – சிறப்பன்றோ
சீர்கொண்ட பாட்டால் செவிமகிழச் செய்தவனின்
பார்போற்றும் தேசப் பணி.
3
பாரதி இயற்றிய பாடல்கள் நிறைந்த இசைமிகுந்து ஓசையின்பம் அளிக்கக் கூடியவையாக அமைந்துள்ளன.அவர் எழுதிய கவிதைகள் உள்ளதை உள்ளபடி எடுத்துச்சொல்லித் தெளிவாக உரைக்கும் வல்லமை வாய்ந்தவை. அத்தகைய புகழ்மிக்க பாடல்களை நமக்கு வழங்கி செவிகள் இனிக்கச் செய்த பாரதியின் நாட்டுத்தொண்டும் உலகமே போற்றத்தக்க மாண்புடையது.
Great is the melodious rhythm of Bharati’ songs,
Great is the clarity in the thoughts conveyed by his poetry, Great is patriotic service rendered by the Poet who created beautiful songs that are musical to listen.
துணிந்திங்(கு) உயர்த்திடுவோம் தோளை – இணைந்து
செயல்பட்டால் வாழ்வுஉயரும் என்றான் தெறிக்கும்
புயல்வேகப் பாடல் பொழிந்து.
4
‘பாரத மக்களே! நாம் இனிமேல் துன்பத்தால் உழன்றுத் தவிக்க வேண்டாம். நமது மன உறுதியின் துணை கொண்டுத் தோள் உயர்த்திப் போராடுவோம். (இவ்வாறு) நாம் அனைவரும் ஒன்றாக இணைந்துச் செயல்பட்டால் நம் வாழ்வு சிறப்படைந்து உயரும்’ – என்று கனல் தெறிக்கும் வார்த்தைகளால் கடும்புயலின் வேகத்தில் கவிதை மழை பொழிந்த்தான் பாரதி.
‘O people of India, do not despair and struggle anymore,
Raise your courage and lift up your head,
Let us unite and make progress’
– Thus spake Bharati with stormy words that motivates the heart.
மொழிந்தான் மனம்கிளரும் உண்மை – செழுந்தேன்
திரண்டெழுந்த சொல்லால் தெளிவுறவே தந்தான்
இருண்டிருந்த நெஞ்சுக்(கு) இதம்.
5
பாரதி இசைமிகுந்த பாடல்களைப் பொழிந்து நம் மனத்தினில் புத்துணர்ச்சி ஊட்டினார். மேலும் அவரது கவிதைகளில் வெளிப்படும் உண்மை நம் ஆழ்மனத்தில் ஒரு கிளர்ச்சியை உண்டாக்கி நம்மை நன்முறையில் செயல்படத் தூண்டும். சுவையான தேன்போன்ற சொற்களால் கவலை இருள் சூழ்ந்த நம் மனத்துக்கு இன்பம் சேர்த்தார்.
Bharati showered songs that brings forth a sense of freshness and novelty in thoughts,
His words tend to stir up the mind to convey the truth and wisdom,
With his sweet words dipped in nectar, he gave comfort and clarity to depressed hearts.
நிதம்களித்(து) இன்புற்று நிற்போம் – மதங்களும்
சாதிகளும் செய்யும் சதியறுப்போம் என்றுரைத்தான்
போதனையே வாழ்வின் பொருள்.
6
‘இன்பம் துன்பம் இவற்றில் எது வந்தாலும் வாழ்வில் எப்போதும் களிப்புடன் இருப்போம். மதங்களும் சாதிகளும் பிரிவினை வாதத்தை வளர்க்கச் செய்யும் சதிகளையெல்லாம் முறியடிப்போம்’ – என்று சொன்ன பாரதியின் அறிவுரையை நம் வாழ்வின் மெய்ப்பொருளாகக் கொண்டு வாழ்வோம்.
‘Whether happiness comes or sorrow befalls upon us,
We should remain neutral to these emotions and maintain stability of mind. By remaining unperturbed by the external events, we acquire a clarity by which we can defeat the conspiracy of religions and caste systems which try to divide and corrupt our minds’ – Thus spake Bharati whose teachings when followed make our life meaningful.
இருள்விலக நல்விளக்கை ஏற்றி – அருள்நிறைந்த
ஆன்மநிலை காட்டி அறமுணர்த்தும் பாரதியின்
வான்புகழைப் போற்றிடுமென் வாய்.
7
‘எல்லாப் பொருள்களிலும் உறையும் உண்மையைத் தெளியவைக்கும் மெய்ஞ்ஞானத்தை நமக்கெல்லாம் புரியும்படித் தெளிவாக விரித்துரைத்து, மனத்தில் அறியாமை என்னும் இருள் விலக ஞான விளக்கை ஏற்றும் பாரதி, அருள் நிறைந்த ஆன்ம நிலையான ‘பிரம்மம் ஒன்று; அது உன் உணர்வு’ என்று உணரும் பேரறிவு நிலையை நமக்குக் காட்டி நல்வழிப்படுத்துகிறார். அத்தகைய வேதாந்தம் கற்பிக்கும் யோகியாக விளங்கும் பாரதியின் வானம் வரை உயர்ந்த நற்புகழை வாய்மணக்கப் போற்றிடுவோம்.
Bharati sang with clarity about the wisdom
That illuminates all things and dispels the darkness of ignorance,
Thereby showing the way to strengthen the soul by following the righteous path.
Let my mouth always praise such a great poet.
பாயும் ஒளிபடைத்த பாரதியின் – தூயமொழிக்
கட்(டு)அதனை வெட்டிச் சிறுமை களைசாய்த்துச்
சுட்டெரிக்கும் தீயின் சுடர்.
8
பாரதி நாவினிக்கப் பாடும் பாடல்களின் வார்த்தைகள் நம் மனத்திற்குள் பாய்ந்து ஒளி வெள்ளத்தை உண்டாக்கும். நம்மைப் பிணைத்திருக்கும் சிறுமை, மடமை, கடமை முதலிய கட்டுக்களை வெட்டி, (நம் வாழ்வென்னும் கழனியில் முளைத்துச் சேதம் செய்யும்) அந்தக் களைகளை அறுத்துத் தீயினில் தூசாக எரித்துவிடும் வல்லமை அவரது தூய சொற்களுக்கு உண்டு.
The sweet words that spring out of Bharati’s mouth
Flood our thoughts with flowing light.
His pure words have the power to remove our shackles,
And free our mind by removing the weeds of ignorance and mediocrity,
Just as a flame would destroy the obstacles in its path.
மடமை வலைமீண்டு வாழ்வாய் – அடிமைச்
சுமைகள் தவிர்த்துஉயரம் தொட்டிடவே ஞான
இமயச் சிகரத்தை எட்டு.
9
நெஞ்சமே! சுடர்வீசும் தமிழ்க்கவிதை படைக்கும் பாரதியின் சொற்களைக் கேட்டு மடமை என்னும் வலையிலிருந்து மீண்டு வந்து விடுதலைப் பெற்று வாழ்வாய்! அடிமைத்தனத்தில் பழகிப் போன நம் சிந்தையில் கவலைச் சுமைகளை அகற்றி, எண்ணங்களை உயர்த்தி, இமயத்தின் சிகரம்போல உயர்ந்து ஆன்ம மெய்ஞ்ஞானமென்னும் பேரிலக்கை அடைந்திட முயல்வாயாக!
O Mind, Listening to the luminous words of Bharati,
Free yourself from the traps of folly and superstitions. Unburdening yourself from the bondage of superstitions,
Try to reach the peaks of spiritual wisdom and glory.
தொட்ட எழுத்தும் சுடர்க்கவியாம் – மெட்டில்
பிரியா இவன்பாட்டும் பேரிடர்செய் பொய்யை
இரையாக்கித் தின்னும் எரி.
10
வானத்தையும் தன் கை வசப்படுத்த வல்ல பாரதியின் கரங்கள் தொட்டு எழுதிய எந்த ஒரு எழுத்தும் சோதிமிக்க நவகவிதையாக மாறிக் காவியமாக உருவெடுக்கும். இசையமைந்த மெட்டில் சிறிதும் பிறழாமல் பண்ணோடு இணைந்து ஒலிக்கும் இவன் பாட்டும், நம் வாழ்வில் துன்பம் விளைவிக்கும் பொய்களை அழித்துச் சுட்டெரிக்கும்.
The sky is within his reach (Nothing is impossible to him),
The words touched by him become great poems;
His songs , which do not deviate from rhythmic melody,
Are flames that consume and destroy all falsehood in our hearts.
English Overview
These Venbas are written in praise of Bharati, a poet, philosopher and mystic, whose poetry stands out in the world for its uniqueness and revolutionary expressions. His poems called ‘Bharathiyar kavithaigal’ in Tamil, are the source of motivation and inspiration to countless people seeking the meaning of life. My poems about Bharathiyar in Tamil, ‘Bharathi venba maalai’ , also referred here as ‘Bharathi patriya kavithaigal’ are my salutations for Bharati, the genius composer of numerous heart-touching songs.
வாழ்த்துகள். அனைத்துப் பாக்களும் அருமை.
அன்புடன்,
வ.க.கன்னியப்பன்
அன்புள்ள ஐயா, தங்கள் வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி!