வெண்பா எழுதுவது எப்படி? – மரபுக் கவிதை வடிப்போம்
வெண்பா எழுதுவது எப்படி என்று தெரிந்து கொண்டால் தமிழ் மொழியின் இலக்கியச் சுவையை நாம் ஆழ்ந்து உணரலாம். வெண்பாவின் இலக்கணத்தை இந்தப் பதிவில் கற்றுத் தேர்வோம்.
வெண்பா எழுதுவது எப்படி என்று தெரிந்து கொண்டால் தமிழ் மொழியின் இலக்கியச் சுவையை நாம் ஆழ்ந்து உணரலாம். வெண்பாவின் இலக்கணத்தை இந்தப் பதிவில் கற்றுத் தேர்வோம்.
Agni Kunjondru Kanden அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் - மகாகவி பாரதியார் எண்ணத்தில் தோன்றும் எரிதழலின் சிறுபொறி என்னும் அக்கினிக்…
நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
‘நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?’ - பாரதியின் ‘தோத்திரப் பாடல்கள்’ என்னும் கவித்தொகுப்பில் ‘கேட்பன’ என்னும் தலைப்பில் அமைந்த இந்தப் பாடல் சிவசக்தியை வணங்கி ஆற்றலும், நன்மனமும், மன உறுதியும் பெற வேண்டி நெஞ்சுருகப் பாடும் அருங்கவிதை.
தெளிந்த அறிவே யோகத்துக்கு முதற்படி. குழப்பம் சூழ்ந்த மனத்தில் யோகம் நிலைக்க முடியாது. அதனால்தான் பாரதியார் ‘அறிவிலே தெளிவு’ கொண்ட உள்ளத்தை முதலில் வேண்டுகிறார். அந்த கலக்கமில்லாத தெளிந்த அறிவின் துணைகொண்டு ‘இமைப்பொழுதும் சோராமல்’ ஓயாமல் தொழில் செய்தால் வாழ்வு சிறக்கும். எது செய்தாலும் அது நல்லதாகவே முடியும். அத்தகைய தெளிந்த அறிவு கொண்டவர்கள் சும்மா இருந்தாலும் மனம் நன்மை செய்து கொண்டே இருக்கும். இதுவே கர்ம யோகமாகும்.
நிடத மன்னன் நளனின் கதையைக் கூறும் நளவெண்பா அமுதம் ஊறும் சொற்களைக் கொண்டு புகழேந்திப் புலவரால் இயற்றப்பட்ட பெருங்காப்பியம். இந்த நூல் அணியும் ஆழமும் நிறைந்த வெண்பாக்களால் கற்க கற்க பேரின்பம் தரவல்லது. இத்தகைய சிறந்த நூலைப் படைத்தமையால் இந்நூலாசிரியர் 'வெண்பாவில் புகழேந்தி' என்று போற்றப்படுகிறார். இந்தத் தேன்சுவைக் காவியத்தைப் பற்றியும் இந்நூலை எழுதிய புகழேந்திப் புலவரைப் பற்றியும் இந்தப் பதிவில் விரிவாக நாம் காண்போம்
ஜேகே என்று அறியப்படும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி எந்த மதத்தையும் மரபையும் சாராத தலைசிறந்த தத்துவ ஞானி. ஜே கிருஷ்ணமூர்த்தி தமது கவித்துவமான சொற்களால் தம் எண்ணங்களை இயல்பாகத் தெளிவுறுத்தும் திறம் வாய்ந்தவர். இவர் தன்னை ஒரு குருவாகக் கருதாமல், மனித மனத்தின் தன்மையை பிரதிபலிக்கும் கண்ணாடி போல யாவரும் கருதவேண்டும் என்று விரும்பினார். புவி அசைக்க வல்ல அவரது தத்துவங்கள் சிலவற்றை இந்தப் பதிவில் காண்போம்.
கலீல் ஜிப்ரான் - லெபனான் தந்த கலைச்செல்வம்;
பாஸ்டன் நகர் வாழ்ந்த பெருங்கவிஞர்;
எழுத்திற் சிறந்த காவியங்களோடு சிந்தை தூண்டும் ஓவியங்களும் படைத்தவர்;
இணையற்ற ஆன்மீக மேதை.
ஜிப்ரான் படைத்த 'தீர்க்கதரிசி'(The Prophet) என்னும் புகழ் வாய்ந்த நன்னூலிருந்து அன்பின் சக்தியைப் பற்றி அவர் எழுதிய கவிதையை அருந்தமிழில் மொழியாக்கம் செய்து கவிதையாகச் சொல்ல இங்கு முயன்றுள்ளேன்.