சித்தர்கள் புகழ் பாடுவோம்

சித்தர்கள்

தன்னை அறிந்துணர்ந்த தவயோகிகள்,
சீவனே சிவனெனத் தெளிந்த தெய்வச் சான்றோர்கள்,
சும்மா இருக்கும் சுகத்தைச் சொன்னவர்கள்,
உறங்கி உறங்காமல் வாழ்ந்த உயர்ஞானிகள்

அத்தகைய பெருஞ்சித்தர்கள் செந்தமிழில் கவிபாடி நம் மனம் இனிக்கச் செய்தவர்கள்.
அந்த ஞானப் பெருந்தகையரின் திருப்புகழைப் போற்றி 'ஆனந்தக் களிப்பு மெட்டில்' பாடல் இயற்றி இங்கு அளித்துள்ளேன்.
பாரதியின் 'அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்' என்னும் பாட்டின் தாளத்தை ஒட்டி அமைந்த பாட்டுக்கள் இவை.

மேலும் படிக்கசித்தர்கள் புகழ் பாடுவோம்
0 Comments
ஓஷோ கவிதைகள்
ஓஷோ

ஓஷோ கவிதைகள்

ஓஷோ - பன்னூல் பயின்ற பரம ஞானி; ;நூற்றுக்கும் மேற்பட்ட தியான முறைகளை வகுத்தவர்; ஒப்புயர்வற்ற சிந்தனையாளர். அவரைப் போற்றும் தமிழ்க்கவிகள் இங்கே.

தேனென இனித்திடும் இவர்பேச்சு
   தீயென எரித்திடும் சிறுமைதனை
வானென விரிந்திடும் சுடரறிவு
  வாளென வீழ்த்திடும் மடமைதனை

மேலும் படிக்கஓஷோ கவிதைகள்
0 Comments

ஞானிகள் காட்டும் நல்வழிகள்

வாழ்வின் போக்கை வழிநடத்தி மனத்தைச் செம்மைப்படுத்தும் நூல்களைக் காண்பது மிகவும் அரிது; அந்நூல்களை நமக்கு அளிக்க இந்தப் புவியில் புகழொடு தோன்றிய அறிஞர் பெருமக்களும் வெகு சிலரே ஆவர். அத்தகைய அறிஞர்களில் என் மனம் வியந்த ஞானியர்களைப் பற்றிப் பின்வரும் பாட்டில் காணலாம்.

ஆரமுதாம் தமிழிசைக்கோர் அழகைச் சேர்க்கும்
ஆழ்வார்நா யன்மார்தம் கவியில் ஆழ்ந்தேன்,
வீரமிகு பார்வையில்வே தாந்தம் சொல்லும்
விவேகா னந்தமுனி ஞானம் கேட்டேன்

மேலும் படிக்கஞானிகள் காட்டும் நல்வழிகள்
0 Comments
பொங்கல் கவிதை
பொங்கல் கவிதை

பொங்கல் கவிதை

தைப்பொங்கல் திருநாளைப் போற்றி, சிந்துப் பாடலாக நான் அமைத்த கவிதை இது.

தைவரும் பொங்கல்நன்னாள் - இந்தத்
தரணியில் வளம்பல தந்திடும் நாள்!
செய்தொழில் சிறக்கவரும் – ஒளிச்
செங்கதிர் செல்வனைப் போற்றிடும் நாள்!

மேலும் படிக்கபொங்கல் கவிதை
2 Comments