1.
அன்பினால் நினைவார்க்(கு) அமுதினும் இனியான்
… அணிமயில் சிற(கு)ஒளிர் சிகையான்
மின்னுமா மணிபோல் திலகவாள் நுதலான்
… மிளிர்குழை திகழ்தரு செவியான்
இன்(பு)எலாம் நிறைக்கும் குழல்அமர் இதழான்
… என்(பு)எலாம் உருக்கிடும் இசையான்
மன்னுமா நிலத்தில் மங்கலம் பெருக
… மதுரையம் பதியுதித் தனனே.
… அணிமயில் சிற(கு)ஒளிர் சிகையான்
மின்னுமா மணிபோல் திலகவாள் நுதலான்
… மிளிர்குழை திகழ்தரு செவியான்
இன்(பு)எலாம் நிறைக்கும் குழல்அமர் இதழான்
… என்(பு)எலாம் உருக்கிடும் இசையான்
மன்னுமா நிலத்தில் மங்கலம் பெருக
… மதுரையம் பதியுதித் தனனே.
பொருள்:
அன்பினால் நினைவார்க்கு = அன்பு கொண்டு தியானிப்பவர்களுக்கு
அமுதினும் இனியான் = அமுதத்தைக் காட்டிலும் இனியவன்;
அணிமயில் = அழகிய மயிலின்
சிறகு ஒளிர் = இறகு பளிச்சிடும்
சிகையான் = தலைமுடியை உடையவன்;
மின்னும் மா மணிபோல் திலகம் = மின்னுகின்ற மணியைப் போன்ற திலகம் அணிந்த
வாள் நுதலான் = ஒளிவீசும் நெற்றியை உடையவன்;
மிளிர் = பொன்னொளி பரப்பும்
குழை = காதணிகள்
திகழ்தரும் = திகழ்கின்ற
செவியான் = திருச்செவிகளை உடையவன்;
இன்பு எலாம் = இன்பங்களை எல்லாம்
நிறைக்கும் = எங்கும் நிறைந்திடச் செய்யும்
குழல் = புல்லாங்குழல்
அமர் = தங்குகின்ற
இதழான் = இதழ்களை உடையவன்;
என்பு எலாம் = (கேட்பவர்களின்) உடல் எலும்புகள் எல்லாம்
உருக்கிடும் = உருகி நெகிழும்படியாக
இசையான் = (அப்புல்லாங்குழலைக் கொண்டு) இசையை எழுப்புபவன்;
மன்னும் = (அத்தகைய பெருமை வாய்ந்த கண்ணன்) நிலைபெற்ற
மா நிலத்தில் = இந்தப் பெரிய உலகத்தில்
மங்கலம் பெருக = நலம் ஓங்கிட
மதுரை அம் பதி = வடமதுரை என்னும் அழகிய நகரில்
உதித்தனனே = தோன்றினான்.
அமுதினும் இனியான் = அமுதத்தைக் காட்டிலும் இனியவன்;
அணிமயில் = அழகிய மயிலின்
சிறகு ஒளிர் = இறகு பளிச்சிடும்
சிகையான் = தலைமுடியை உடையவன்;
மின்னும் மா மணிபோல் திலகம் = மின்னுகின்ற மணியைப் போன்ற திலகம் அணிந்த
வாள் நுதலான் = ஒளிவீசும் நெற்றியை உடையவன்;
மிளிர் = பொன்னொளி பரப்பும்
குழை = காதணிகள்
திகழ்தரும் = திகழ்கின்ற
செவியான் = திருச்செவிகளை உடையவன்;
இன்பு எலாம் = இன்பங்களை எல்லாம்
நிறைக்கும் = எங்கும் நிறைந்திடச் செய்யும்
குழல் = புல்லாங்குழல்
அமர் = தங்குகின்ற
இதழான் = இதழ்களை உடையவன்;
என்பு எலாம் = (கேட்பவர்களின்) உடல் எலும்புகள் எல்லாம்
உருக்கிடும் = உருகி நெகிழும்படியாக
இசையான் = (அப்புல்லாங்குழலைக் கொண்டு) இசையை எழுப்புபவன்;
மன்னும் = (அத்தகைய பெருமை வாய்ந்த கண்ணன்) நிலைபெற்ற
மா நிலத்தில் = இந்தப் பெரிய உலகத்தில்
மங்கலம் பெருக = நலம் ஓங்கிட
மதுரை அம் பதி = வடமதுரை என்னும் அழகிய நகரில்
உதித்தனனே = தோன்றினான்.
English Translation
He who is sweeter than nectar for those who meditate on Him with love and devotion,
He whose crown is adorned with a beautiful peacock’s plume,
He whose forehead gleams with a bead-like tilak,
He whose ears shine with golden ear-rings,
He whose lips, on which a flute rests, fill happiness around,
He whose bone-melting music (springing from the flute) captivates the listener,
He was born in the beautiful city of Mathura,
To bestow abounding prosperity on the world.
He whose crown is adorned with a beautiful peacock’s plume,
He whose forehead gleams with a bead-like tilak,
He whose ears shine with golden ear-rings,
He whose lips, on which a flute rests, fill happiness around,
He whose bone-melting music (springing from the flute) captivates the listener,
He was born in the beautiful city of Mathura,
To bestow abounding prosperity on the world.