அறத்துப்பால் – கடவுள் வாழ்த்து
குறள்பா – 1 :
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
விளக்க விருத்தம் (அறுசீர் ஆசிரிய விருத்தம்) :
அகரம் என்னும் ஓரெழுத்தாம்
அறிவை விரிக்கும் சீரெழுத்தாம்
திகழும் எழுத்துத் திரட்கெல்லாம்
திலகம் அனைய முதலெழுத்தாம்
புகழும் அகர எழுத்தினைப்போல்
புவிக்கோர் இறைவன் முதலாவான்
அகமும் புறமும் ஆள்பவனாம்
அன்னை தந்தை ஆனவனாம்.
அகரம் என்னும் ஓரெழுத்தாம்
அறிவை விரிக்கும் சீரெழுத்தாம்
திகழும் எழுத்துத் திரட்கெல்லாம்
திலகம் அனைய முதலெழுத்தாம்
புகழும் அகர எழுத்தினைப்போல்
புவிக்கோர் இறைவன் முதலாவான்
அகமும் புறமும் ஆள்பவனாம்
அன்னை தந்தை ஆனவனாம்.
குறள்பா – 2 :
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
விளக்க விருத்தம் (அறுசீர் ஆசிரிய விருத்தம்) :
ஞானக் கலைகள் பயின்றிடினும்
நயமார் நூல்கள் நவின்றிடினும்
வானம் அறிந்த(து) அனைத்தினையும்
வகையோ(டு) அறிந்து தெளிந்திடினும்
தானோர் தூய அறிவுருவன்
தலைவன் மலர்த்தாள் தொழுதேத்தி
ஆனா அன்பால் உருகாரேல்
அறிவின் பயனைப் பெறுவாரோ?
ஞானக் கலைகள் பயின்றிடினும்
நயமார் நூல்கள் நவின்றிடினும்
வானம் அறிந்த(து) அனைத்தினையும்
வகையோ(டு) அறிந்து தெளிந்திடினும்
தானோர் தூய அறிவுருவன்
தலைவன் மலர்த்தாள் தொழுதேத்தி
ஆனா அன்பால் உருகாரேல்
அறிவின் பயனைப் பெறுவாரோ?
(ஆனா = நீங்காத)
குறள்பா – 3 :
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
விளக்க விருத்தம் (அறுசீர் ஆசிரிய விருத்தம்) :
அருள்கொண் டாடும் அடியார்கள்
அன்பின் நினைந்த அப்போதே
விரியும் மனமாம் மலர்தன்னில்
விரைவின் மேவி இடங்கொள்வான்
ஒருநற் கதியாம் அவன்தாளில்
ஒன்றிக் கலக்கும் உணர்வுடையார்
திருவில் பொலியும் வாழ்வுறுவார்
செழுவீட்(டு) உலகும் பெறுவாரே.
அருள்கொண் டாடும் அடியார்கள்
அன்பின் நினைந்த அப்போதே
விரியும் மனமாம் மலர்தன்னில்
விரைவின் மேவி இடங்கொள்வான்
ஒருநற் கதியாம் அவன்தாளில்
ஒன்றிக் கலக்கும் உணர்வுடையார்
திருவில் பொலியும் வாழ்வுறுவார்
செழுவீட்(டு) உலகும் பெறுவாரே.
(மேவி = விரும்பி அடைந்து; திரு = செல்வம்; செழுவீட்டு உலகம் = மோட்சம்)
குறள்பா – 4 :
வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
விளக்க விருத்தம் (அறுசீர் ஆசிரிய விருத்தம்) :
வேண்டும் எனவொன்(று) இல்லாதான்
விருப்புற்(று) எதையும் நண்ணாதான்
வேண்டா வெனவும் தள்ளாதான்
வெறுப்பொன்(று) அகத்தில் கொள்ளாதான்
மாண்புற்(று) ஒளிரும் குணமுடையான்
மலர்த்தாள் பணியும் மனமுடையார்
தீண்டும் துயரற்(று) என்றென்றும்
சிந்தை தெளிந்து வாழ்வாரே.
வேண்டும் எனவொன்(று) இல்லாதான்
விருப்புற்(று) எதையும் நண்ணாதான்
வேண்டா வெனவும் தள்ளாதான்
வெறுப்பொன்(று) அகத்தில் கொள்ளாதான்
மாண்புற்(று) ஒளிரும் குணமுடையான்
மலர்த்தாள் பணியும் மனமுடையார்
தீண்டும் துயரற்(று) என்றென்றும்
சிந்தை தெளிந்து வாழ்வாரே.
(நண்ணாதான் = நாடாதவன்; மலர்த்தாள் = மலர் போன்ற திருவடிகள்)
குறள்பா – 5 :
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
விளக்க விருத்தம் (அறுசீர் ஆசிரிய விருத்தம்) :
அறிவை மயக்கி இருள்பெருக்கி
அழுத்தும் தீய வினைப்பலனும்
பிறவிச் சுழலில் தளைப்படுத்திப்
பிணைக்கும் தூய வினைப்பலனும்
அறவே விலக அகமகிழ்வார்
அறிவும் சிறக்க நலமுறுவார்
இறவாப் புகழ்சேர் இறையருளை
எண்ணித் துதிக்கும் மனத்தவரே.
அறிவை மயக்கி இருள்பெருக்கி
அழுத்தும் தீய வினைப்பலனும்
பிறவிச் சுழலில் தளைப்படுத்திப்
பிணைக்கும் தூய வினைப்பலனும்
அறவே விலக அகமகிழ்வார்
அறிவும் சிறக்க நலமுறுவார்
இறவாப் புகழ்சேர் இறையருளை
எண்ணித் துதிக்கும் மனத்தவரே.
குறள்பா – 6 :
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
விளக்க விருத்தம் (அறுசீர் ஆசிரிய விருத்தம்) :
விழிவாய் செவிமூக்(கு) உடலென்னும்
வெல்லற்(கு) அரிய புலனைந்தின்
வழியை அறிவாம் தாழ்கொளுவி
மறித்துச் சிறக்கும் நலமுடையான்
ஒழிவில் உண்மை ஒளியோங்கும்
ஒருநல் தலைவன் அவன்காட்டும்
வழுவில் நெறியே மருவிடுவார்
மண்ணில் நெடுநாள் வாழ்குவரே!
விழிவாய் செவிமூக்(கு) உடலென்னும்
வெல்லற்(கு) அரிய புலனைந்தின்
வழியை அறிவாம் தாழ்கொளுவி
மறித்துச் சிறக்கும் நலமுடையான்
ஒழிவில் உண்மை ஒளியோங்கும்
ஒருநல் தலைவன் அவன்காட்டும்
வழுவில் நெறியே மருவிடுவார்
மண்ணில் நெடுநாள் வாழ்குவரே!
(தாழ்கொளுவி = தாழ்ப்பாளைப் பூட்டி; மறித்து = அடைத்து; ஒழிவில் = நீங்காத; வழுவில் = குற்றமற்ற)
குறள்பா – 7 :
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
விளக்க விருத்தம் (அறுசீர் ஆசிரிய விருத்தம்) :
நிகரென்(று) ஒருவர் இல்லாதான்
நினைவால் உணர ஒண்ணாதான்
புகழில் மிகுநர் இல்லாதான்
பொருவற்(று) ஒளிரும் அன்பாவான்
புகலென் பவர்க்கோர் சார்வாவான்
பொற்றாள் வணங்கி னார்க்கல்லால்
மிகுவெந் துயரம் வாட்டாமல்
வெல்லும் திறனும் வாயாதே.
நிகரென்(று) ஒருவர் இல்லாதான்
நினைவால் உணர ஒண்ணாதான்
புகழில் மிகுநர் இல்லாதான்
பொருவற்(று) ஒளிரும் அன்பாவான்
புகலென் பவர்க்கோர் சார்வாவான்
பொற்றாள் வணங்கி னார்க்கல்லால்
மிகுவெந் துயரம் வாட்டாமல்
வெல்லும் திறனும் வாயாதே.
(உணர ஒண்ணாதான் = உணர முடியாதவன்; மிகுநர் = உயர்ந்தவர்; பொருவற்று = ஒப்பற்று; புகல் = அடைக்கலம்; பொற்றாள் = பொன் தாள் = பொன்போன்ற திருவடிகள்; வாயாதே = வாய்க்காதே)
குறள்பா – 8 :
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
விளக்க விருத்தம் (அறுசீர் ஆசிரிய விருத்தம்) :
தருமம் எனுமோர் தடங்கடலின்
தனிப்பே ருருவாம் ஒருதலைவன்
அருளைப் பொழியும் அருந்தவத்தோன்
அகிலம் புரந்(து)ஓர் அரசிருப்போன்
புரையில் மலர்நேர் திருவடிகள்
புணையென்(று) அடையும் அடியவர்க்கே
திரைநின்(று) அலைக்கும் பொருளின்பச்
சுழலைக் கடக்கும் திறன்வருமே.
தருமம் எனுமோர் தடங்கடலின்
தனிப்பே ருருவாம் ஒருதலைவன்
அருளைப் பொழியும் அருந்தவத்தோன்
அகிலம் புரந்(து)ஓர் அரசிருப்போன்
புரையில் மலர்நேர் திருவடிகள்
புணையென்(று) அடையும் அடியவர்க்கே
திரைநின்(று) அலைக்கும் பொருளின்பச்
சுழலைக் கடக்கும் திறன்வருமே.
(புரையில்= குற்றமற்ற; மலர் நேர் = மலர் போன்ற; புணை = தெப்பம்)
குறள்பா – 9 :
கோளில் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
கோளில் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
விளக்க விருத்தம் (அறுசீர் ஆசிரிய விருத்தம்) :
குணமொன்(று) இலதாம் உணர்வில்லாக்
கோலப் பதுமை அதுபோல
அணிவா யொடுகண் செவிமூக்கும்
அறிவற் றிருந்தால் நலமுண்டோ?
குணமோர் எட்டும் உடையான்றன்
குரைசே வடியே சரணென்று
கணம்எப் பொழுதும் தொழுதேத்தக்
கருதாத் தலையால் பயனுண்டோ?
குணமொன்(று) இலதாம் உணர்வில்லாக்
கோலப் பதுமை அதுபோல
அணிவா யொடுகண் செவிமூக்கும்
அறிவற் றிருந்தால் நலமுண்டோ?
குணமோர் எட்டும் உடையான்றன்
குரைசே வடியே சரணென்று
கணம்எப் பொழுதும் தொழுதேத்தக்
கருதாத் தலையால் பயனுண்டோ?
(பதுமை = பொம்மை; குரை சேவடி = ஒலிக்கின்ற கழல் அணிந்த சிவந்த திருவடிகள்)
குறள்பா – 10 :
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவ னடிசேரா தார்.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவ னடிசேரா தார்.
விளக்க விருத்தம் (அறுசீர் ஆசிரிய விருத்தம்) :
நவையே பெருக்கி நலிவுறுத்தி
நசையால் உளத்தைத் தளைப்படுத்தி
அவமே விளைக்கும் பிறப்பிறப்பாம்
அலைசேர் கடலும் கடந்திடுவார்
புவிகால் முதலாம் பூதமெலாம்
பொலிவார்ந்(து) ஒளிரும் தனிமுதல்வன்
அவியாப் புகழ்சேர் அடியிணையே
அருமாத் துணையென்(று) அணைந்தவரே.
நவையே பெருக்கி நலிவுறுத்தி
நசையால் உளத்தைத் தளைப்படுத்தி
அவமே விளைக்கும் பிறப்பிறப்பாம்
அலைசேர் கடலும் கடந்திடுவார்
புவிகால் முதலாம் பூதமெலாம்
பொலிவார்ந்(து) ஒளிரும் தனிமுதல்வன்
அவியாப் புகழ்சேர் அடியிணையே
அருமாத் துணையென்(று) அணைந்தவரே.
(நவை = குற்றம்; நசை = பற்று; அவம் = தீமை; கால் = காற்று; அவியா = அழியாத; அணைந்தவர் = சேர்ந்தவர்)