மயில் – ஜெண்டாங்கிள் சித்திரம்
மயில் - ஜெண்டாங்கிள் சித்திரம்

மயில் – ஜெண்டாங்கிள் சித்திரம்

'ஜெண்டாங்கிள்' (Zentangle) முறையைப் பின்பற்றி நான் வரைந்த மயில் ஓவியம்

மேலும் படிக்கமயில் – ஜெண்டாங்கிள் சித்திரம்
0 Comments

போதி நிழல் புனிதன் – புத்தர் பொன்மொழிகள்

போதியம் திருநிழல் புனிதன், மாரனை வெல்லும் வீரர், மாயையைத் விலக்கும் சோதி, பூரணம் அடைந்த தேவர் என்று போற்றப்படும் சாக்கிய முனியாம் கௌதம புத்தரின் போதனைகள் மற்றும் ஆன்ம சாதனைகள் பற்றிப் புகழ்ந்திசை பாடும் கவிதைகள் இங்கே!

மேலும் படிக்கபோதி நிழல் புனிதன் – புத்தர் பொன்மொழிகள்
0 Comments
ஜே கிருஷ்ணமூர்த்தி – வாழ்க்கையும் தத்துவமும்
ஜே கிருஷ்ணமூர்த்தி

ஜே கிருஷ்ணமூர்த்தி – வாழ்க்கையும் தத்துவமும்

ஜேகே என்று அறியப்படும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி எந்த மதத்தையும் மரபையும் சாராத தலைசிறந்த தத்துவ ஞானி. ஜே கிருஷ்ணமூர்த்தி தமது கவித்துவமான சொற்களால் தம் எண்ணங்களை இயல்பாகத் தெளிவுறுத்தும் திறம் வாய்ந்தவர். இவர் தன்னை ஒரு குருவாகக் கருதாமல், மனித மனத்தின் தன்மையை பிரதிபலிக்கும் கண்ணாடி போல யாவரும் கருதவேண்டும் என்று விரும்பினார். புவி அசைக்க வல்ல அவரது தத்துவங்கள் சிலவற்றை இந்தப் பதிவில் காண்போம்.

மேலும் படிக்கஜே கிருஷ்ணமூர்த்தி – வாழ்க்கையும் தத்துவமும்
2 Comments

சித்தர்கள் புகழ் பாடுவோம்

சித்தர்கள்

தன்னை அறிந்துணர்ந்த தவயோகிகள்,
சீவனே சிவனெனத் தெளிந்த தெய்வச் சான்றோர்கள்,
சும்மா இருக்கும் சுகத்தைச் சொன்னவர்கள்,
உறங்கி உறங்காமல் வாழ்ந்த உயர்ஞானிகள்

அத்தகைய பெருஞ்சித்தர்கள் செந்தமிழில் கவிபாடி நம் மனம் இனிக்கச் செய்தவர்கள்.
அந்த ஞானப் பெருந்தகையரின் திருப்புகழைப் போற்றி 'ஆனந்தக் களிப்பு மெட்டில்' பாடல் இயற்றி இங்கு அளித்துள்ளேன்.
பாரதியின் 'அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்' என்னும் பாட்டின் தாளத்தை ஒட்டி அமைந்த பாட்டுக்கள் இவை.

மேலும் படிக்கசித்தர்கள் புகழ் பாடுவோம்
0 Comments
கலீல் ஜிப்ரான் கவிதைகள்
கலீல் ஜிப்ரான்

கலீல் ஜிப்ரான் கவிதைகள்

கலீல் ஜிப்ரான் - லெபனான் தந்த கலைச்செல்வம்; பாஸ்டன் நகர் வாழ்ந்த பெருங்கவிஞர்; எழுத்திற் சிறந்த காவியங்களோடு சிந்தை தூண்டும் ஓவியங்களும் படைத்தவர்; இணையற்ற ஆன்மீக மேதை.
ஜிப்ரான் படைத்த 'தீர்க்கதரிசி'(The Prophet) என்னும் புகழ் வாய்ந்த நன்னூலிருந்து அன்பின் சக்தியைப் பற்றி அவர் எழுதிய கவிதையை அருந்தமிழில் மொழியாக்கம் செய்து கவிதையாகச் சொல்ல இங்கு முயன்றுள்ளேன்.

மேலும் படிக்ககலீல் ஜிப்ரான் கவிதைகள்
2 Comments
பாஞ்சசன்னியம் – ஜெண்டாங்கிள் சித்திரம்
பாஞ்சசன்னியம்

பாஞ்சசன்னியம் – ஜெண்டாங்கிள் சித்திரம்

'ஜெண்டாங்கிள்' (Zentangle) முறையைப் பின்பற்றி நான் வரைந்த ஓவியம் மூல ஓவியம் (நன்றி) : Rashmi's Art Shop

மேலும் படிக்கபாஞ்சசன்னியம் – ஜெண்டாங்கிள் சித்திரம்
0 Comments

திருவேங்கடமுடையான் – ஜெண்டாங்கிள் சித்திரம்

'ஜெண்டாங்கிள்' (Zentangle) முறையைப் பின்பற்றி நான் வரைந்த ஓவியம் மூல ஓவியம் (நன்றி) : Rashmi's Art Shop

மேலும் படிக்கதிருவேங்கடமுடையான் – ஜெண்டாங்கிள் சித்திரம்
0 Comments
ஓஷோ கவிதைகள்
ஓஷோ

ஓஷோ கவிதைகள்

ஓஷோ - பன்னூல் பயின்ற பரம ஞானி; ;நூற்றுக்கும் மேற்பட்ட தியான முறைகளை வகுத்தவர்; ஒப்புயர்வற்ற சிந்தனையாளர். அவரைப் போற்றும் தமிழ்க்கவிகள் இங்கே.

தேனென இனித்திடும் இவர்பேச்சு
   தீயென எரித்திடும் சிறுமைதனை
வானென விரிந்திடும் சுடரறிவு
  வாளென வீழ்த்திடும் மடமைதனை

மேலும் படிக்கஓஷோ கவிதைகள்
0 Comments

ஞானிகள் காட்டும் நல்வழிகள்

வாழ்வின் போக்கை வழிநடத்தி மனத்தைச் செம்மைப்படுத்தும் நூல்களைக் காண்பது மிகவும் அரிது; அந்நூல்களை நமக்கு அளிக்க இந்தப் புவியில் புகழொடு தோன்றிய அறிஞர் பெருமக்களும் வெகு சிலரே ஆவர். அத்தகைய அறிஞர்களில் என் மனம் வியந்த ஞானியர்களைப் பற்றிப் பின்வரும் பாட்டில் காணலாம்.

ஆரமுதாம் தமிழிசைக்கோர் அழகைச் சேர்க்கும்
ஆழ்வார்நா யன்மார்தம் கவியில் ஆழ்ந்தேன்,
வீரமிகு பார்வையில்வே தாந்தம் சொல்லும்
விவேகா னந்தமுனி ஞானம் கேட்டேன்

மேலும் படிக்கஞானிகள் காட்டும் நல்வழிகள்
0 Comments
பொங்கல் கவிதை
பொங்கல் கவிதை

பொங்கல் கவிதை

தைப்பொங்கல் திருநாளைப் போற்றி, சிந்துப் பாடலாக நான் அமைத்த கவிதை இது.

தைவரும் பொங்கல்நன்னாள் - இந்தத்
தரணியில் வளம்பல தந்திடும் நாள்!
செய்தொழில் சிறக்கவரும் – ஒளிச்
செங்கதிர் செல்வனைப் போற்றிடும் நாள்!

மேலும் படிக்கபொங்கல் கவிதை
2 Comments