நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?

"நான் சராசரி மனிதர்களைப் போல இழிவாழ்க்கை வாழப் பிறந்தவன் அல்ல; புகழ்வாழ்க்கை வாழ்ந்து செயற்கரிய செயல் புரிந்து இந்த மானுடத்தை உயர்த்த வந்தவன். அதனால் நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வாழ்ந்து மடியும் மூடர்களைப் போல 'நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?'" என்று பராசக்தியைப் பார்த்துக் கேட்கும் துணிவும் துடிப்யும் மிகுந்த இந்தக் கனல் தெறிக்கும் வார்த்தைகளின் உட்பொருளை இங்கு ஆய்ந்து பார்ப்போம்.

மேலும் படிக்கநான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?
0 Comments

பல வேடிக்கை மனிதரைப் போலே

தேடிச் சோறு நிதம் தின்று வெற்று வாழ்க்கை வாழ்ந்து மடியும் வேடிக்கை மனிதரைப் போலே நானும் வீழ்ந்து மடியமாட்டேன் என்னும் இந்தக் கவிதை வரியில் வெளிப்படும் எள்ளலும், நகைப்பும் கலந்த இடித்துரைப்பும் உணர்த்தும் வாழ்க்கைநெறியை இங்கு ஆய்ந்து பார்க்கலாம்.

மேலும் படிக்கபல வேடிக்கை மனிதரைப் போலே
0 Comments

கொடுங்கூற்றுக்கு இரையெனப் பின் மாயும்

'கொடுங்கூற்றுக்கு இரையெனப் பின் மாயும்' - கண்மண் தெரியாமல் கயிற்றினை வீசிக் கணக்கற்ற உயிர்களின் கணக்கை முடிக்கும் காலன் கருணையற்றவன்; காலம் நேரம் பார்க்காதவன்; நல்லோர் தீயோர் என்று தெளியாதவன். அத்தகைய மிருககுணம் கொண்ட காலனுக்கு உணவாகப் பயனின்றி வாழ்ந்து மடிகின்ற பேதை மனிதர்களின் நிலையைக் கண்டு வருந்தும் பாரதியின் இந்த வார்த்தைகளை இப்பதிவில் ஆராய்ந்து பார்ப்போம்.

மேலும் படிக்ககொடுங்கூற்றுக்கு இரையெனப் பின் மாயும்
0 Comments

நரை கூடிக் கிழப்பருவம் எய்தி

'நரை கூடிக் கிழப்பருவம் எய்தி' - ஞானத்திலும் அனுபவத்திலும் முதிர்ச்சி அடையாமல் தலைநரைத்து வயது முதிர்ந்து முதுமை அடைந்தவர்களின் வாழ்க்கை தமக்கும் தம் சந்ததியினருக்கும் எந்த வித நன்மையும் அளிக்காத வீண்வாழ்வாகவே முடியும். இந்தப் பேருண்மையைச் சொல்லும் பெருங்கவிஞரின் இந்த ஞானமொழிகளின் கருத்தை இப்பதிவில் ஆய்ந்து நோக்குவோம்.

மேலும் படிக்கநரை கூடிக் கிழப்பருவம் எய்தி
0 Comments

பிறர் வாடப் பல செயல்கள் செய்து

'பிறர் வாடப் பல செயல்கள் செய்து' - துன்புறுத்தித் துயர் கொடுத்துத் தொல்லை வினைகள் புரிந்து பிறர் வாழ்வைச் சிதைக்க நினைக்கும் மதிகெட்ட மூடர்களின் நெறிகெட்ட செயல்களைப் பழிக்கும் பாரதியின் இந்தச் சொற்களில் புதைந்துள்ள உணர்வுகளை இந்தப் பதிவில் அலசி ஆராய்ந்து பார்ப்போம்.

மேலும் படிக்கபிறர் வாடப் பல செயல்கள் செய்து
0 Comments

மனம் வாடித் துன்பம் மிக உழன்று

'மனம் வாடித் துன்பம் மிக உழன்று' - இந்த வார்த்தைகள், மனக்கவலை என்னும் சுழலில் சிக்கிச் சுழன்று தவிப்பவர்களைப் பார்த்து நெஞ்சம் வாடும் ஒரு மகாகவிஞனின் மனக்குமுறல்; எதற்கெடுத்தாலும் பதைபதைத்து நெஞ்சம் துடிதுடித்துத் துயரக் கடலில் ஆழும் மனிதர்களின் இழிநிலையைக் கண்டு வெடிக்கும் வார்த்தைச் சிதறல்; அஞ்சி அஞ்சி சாகும் அடிமைத்தனத்தை ஒழிக்கப் புறப்பட்ட அக்கினிக் குஞ்சு; உலகம் யாவையும் அமுதமெனப் பார்க்கும் வேத வாழ்க்கையை நாம் அனுபவிக்க வழிகாட்டும் மணிமொழிகள். இத்தகைய ஆற்றல் மிகுந்த வார்த்தைகளின் அர்த்தத்தை இப்பதிவில் ஆராய்ந்து நோக்குவோம்.

மேலும் படிக்கமனம் வாடித் துன்பம் மிக உழன்று
0 Comments

பல சின்னஞ்சிறு கதைகள் பேசி

'பல சின்னஞ்சிறு கதைகள் பேசி' - இந்தச் சொற்கள், பயனற்ற பழங்கதைகள் பல பேசிக் கலகத்தை உண்டாக்கும் வேலையற்ற வீணர்களைக் கண்டிக்கும் கனல் தெறிக்கும் வார்த்தைகள்; நெஞ்சில் உரமும் இல்லாமல், நேர்மைத் திறமும் இல்லாமல், வஞ்சனை சொல்லி மதிமயக்குபவர்களைப் பார்த்துக் கொதித்தெழும் நெருப்பின் பிழம்பு; 'சொல்வேறு செயல்வேறு' என்று இருக்கும் போலி மனிதர்களின் பொய்யான போக்கைப் படம்பிடித்துக் காட்டும் சொற்சித்திரம். பொய்ம்மையைச் சாடிப் புயலென வீசும் இந்த வார்த்தைகள் புகட்டும் பாடத்தை நாம் ஆராய்ந்து கற்றுணர்வோம்! வாருங்கள்!

மேலும் படிக்கபல சின்னஞ்சிறு கதைகள் பேசி
0 Comments