“வாரணம் ஆயிரம்” (Vaaranam Aayiram) என்று தொடங்கும் நாச்சியார் திருமொழிப் பாடல்களில், கண்ணன் மேல் ஆராக் காதல் கொண்டு, அவனைத் தன் நாயகனாகப் பெற விரும்பிய ஶ்ரீ ஆண்டாள், அவனைத் தான் மணம் செய்து கொண்டதாகக் கனவு கண்டு, அதனைத் தன் தோழிக்குக் கூறுகிறாள். எளிய சொற்களும், சிறப்பான பொருட்சுவையும் பூரண இசைப்பொலிவும் பெற்று விளங்கும் இப்பாடல்கள் வைணவத் திருமணங்களில் இன்றியமையாத ஒரு சடங்காக அன்றுதொட்டு இன்றுவரை அமைந்து வருகின்றன.
வாரணம் ஆயிரம் – சிறு குறிப்பு | |
---|---|
அருளியவர் | ஶ்ரீ ஆண்டாள் |
திருமொழி | நாச்சியார் திருமொழி |
நூல் | நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் |
இராகம் | கல்யாணி இராகம் |
தாளம் | ரூபகதாளம் |
பாவகை | கலி விருத்தம் |
Vaaranam Aayiram – The Dream Divine
“Vaaranam Aayiram” is a very renowned Thirumozhi in the Divine compilation of Sri Andal’s pasurams called ‘Nachiyaar Thirumozhi’. Even today this sixth Thirumozhi is being sung in all Vedic weddings. In these songs, Andal in Her ecstasy, describes to Her friend about the dream in which She marries Lord Narayana in all His glory. Vaaranam Aayiram Lyrics with meaning in Tamil is provided below.
1. திருமண ஏற்பாடுகள் நடைபெறக் கனாக் கண்டேன்
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.
பாடல் பொருள்:
தோழீ, கல்யாண குணங்கள் நிறைந்தவனான நாராயணமூர்த்தி, ஆயிரம் யானைகள் சூழ்ந்துவர எழுந்தருளி வலம் வருகிறான் என்று அவனை வரவேற்று எதிரே பொன்னாலான பூரண குடம் வைத்து, நகரம் முழுவதும் தோரண கம்பங்கள் நாட்டி அலங்கரிக்கும் இந்நிலையினை நான் கனவில் கண்டு களித்தேன்.
English Rendering :
Flanked by a thousand elephants, in a grand procession,
Walks Narayana the Lord Divine,
Towards the Hall of Wedding;
Welcoming Him with golden pots filled to the rim,
Stands the whole town adorned with festive decorations.
I dreamed a dream, O friend!
பாடல் விளக்கம்:
வாரணம் என்றால் யானை என்று பொருள். ஆயிரம் யானைகள் புடைசூழ கண்ணன் களிற்றின் மேலேறி வலம் வந்தான் என்பதை, “வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து” என்னும் பாடல் வரி குறிப்பிடுகிறது.
‘அரங்கனைத் துயிலெழுப்ப பெரிய ஆண் யானைகளும் பெண் யானைகளும் கோவில்முன் திரண்டிருந்து மங்கல வாத்தியங்களும் முழங்க கடலின் இரைச்சல் போல ஒலி அரங்கநகர் முழுவதும் பரவுகின்றது’ என்று தொண்டரப்பொடியாழ்வார் திருபள்ளியெழுச்சியில் பாடியது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.
அதிர்தலில் அலைகடல் போன்றுளது எங்கும்’
– தொண்டரப்பொடி ஆழ்வார் (திருப்பள்ளி எழுச்சி)
‘நம்பி’ என்ற சொல்லுக்கு சகல குண பரிபூர்ணன் என்று பொருள். ஶ்ரீமன் நாராயணன் அனைத்து கல்யாண குணங்களும் நிறைந்தவன் ஆதலால், ‘நம்பி’ என்ற அழகிய தமிழ்ச்சொல் கொண்டு அவனை அழைக்கிறாள் கோதை. ‘இராமனாகிய நம்பியின் வடிவழகைப் பார்ப்பதற்கு சீதைக்கு ஆயிரம் கண்கள் வேண்டும்; அதேபோன்று, சீதையின் பேரெழிலைக் காண்பதற்கும் இராமனுக்கு ஆயிரம் கண்கள் போதாது’ என்று கம்பநாட்டாழ்வார் கூறுவதும் இங்கு ஒப்பு நோக்கலாம்.
கொம்பினைக் காணும் தோறும் குரிசிற்கும் அன்னதே ஆம்
– கம்பர் (இராமாயணம் – பால காண்டம்)
2. கோவிந்தனான காளை வரக் கனாக் கண்டேன்
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,
கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர்
காளை புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்.
பாடல் பொருள்:
தோழீ, “நாளைய தினம் கண்ணனுக்கும் ஆண்டாளுக்கும் திருமணவிழா” என்று நாள் நிச்சயித்து பின்னர் விவாகத்தின் முதல்நாள் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்வதற்காக, பாளையோடு கூடிய கமுகினால் அலங்காரம் செய்யப்பட்ட மணப்பந்தலின் கீழே, நரசிம்மன், மாதவன், கோவிந்தன் என்னும் திருநாமங்கள் பூண்ட கண்ணன் என்னும் இளங்காளை போல்வான் பிரவேசிக்க நான் கனாக் கண்டேன்.
English Rendering :
Enters the hall of wedding decorated with palms,
The Young Bull,
Whom they call Narasimha, Madhava and Govinda!
I dreamed a dream, O friend!
பாடல் விளக்கம்:
‘வாரணம் ஆயிரம் சூழ’ நகரில் வலம் வந்த மதுசூதனன் திருமணப் பந்தலின்கீழ் பிரவேசித்த காட்சியை விளக்குகிறது இந்தப் பாடல்.
விவாகத்தின் முன்னாளில் செய்ய வேண்டிய சடங்குகளையெல்லாம் விவரிக்கிறது இந்தப் பாடல். ‘வதுவை’ = திருமணம். ‘குயில்இனம் வதுவை செய்ய, கொம்பிடைக் குனிக்கும் மஞ்ஞை’ என்று கம்பராமாயணமும் கூறுவதை இங்கு நோக்கலாம்.
‘கோளரி’ = பொலிவுமிக்க சிங்கம். ‘மாறு ஆய தானவனை வள்ளுகிரால் மார் இரண்டு கூறாகக் கீறிய கோளரி” என்று நரசிம்ம அவதாரத்தின் பெருமைகளைக் குறிப்பிடும்போது நரசிம்மப் பெருமானை ‘கோளரி’ என்ற நாமம் கொண்டே துதிக்கின்றார் திருமழிசை ஆழ்வார். ‘தெள்ளிய சிங்கம் ஆகிய தேவு’ என்று திருமங்கை ஆழ்வாரும் திருவல்லிக்கேணி திருமாலைப் பாடுகின்றார்.
அத்தகைய மிடுக்குடைய சிங்கம் போன்றவன் கண்ணன் என்பதால் கோதையும் கோளரி என்ற பெயர் கொண்டு மாதவனை அழைக்கின்றாள். மேலும் ஏறுபோல் பீடு நடை உடையவனாதலால் காளை என்றும் அவனைப் போற்றுகின்றாள். புகுத = பிரவேசிக்க
3. என்னை மகட்பேசி மந்திரிக்கக் கனாக் கண்டேன்
வந்திருந் தென்னை மகட்பேசி மந்திரித்து,
மந்திரக் கோடி யுடுத்தி மணமாலை,
அந்தரி சூட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.
பொருள்: தோழீ, கண்ணனுக்கும் எனக்கும் நடக்கும் திருமணத்தைக் காண, இந்திரன் முதலிய தேவர்கள் மாப்பிள்ளை வீட்டாராக இந்தப் பூவுலகத்துக்கு வந்திருந்து, கண்ணனுக்கு மணமகளாக என்னைத் தரும் படி கேட்டு நிச்சயித்தனர். அதன் பின், கண்ணனின் உடன் பிறந்தாளான துர்க்கை எனக்குத் தூயதான புதிய ஆடையை உடுத்தி வாசனையுள்ள மலர்மாலையும் அணிவித்தாள், இவ்வாறு கனாக் கண்டேன்.
And they declared me bride and clad me in a new robe blessed by sacred chants,
Durga, the Goddess of Inner Force, adorned me with the wedding garland.
I dreamed a dream, O friend!
4. காப்புக் கயிறு கட்டுவதாகக் கனாக் கண்டேன்
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லா ரெடுத்தேத்தி,
பூப்புனை கண்ணிப் புனிதனோ டென்றன்னை,
காப்புநாண் கட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.
பொருள்: தோழீ, அந்தணர்கள் பலர் சேர்ந்து, நான்கு திசைகளிலிருந்தும் கொண்டு வரப்பட்ட புண்ணிய தீர்த்தங்களை நன்றாக எங்கள்மீது தெளித்து, மந்திரம் சொல்லி வாழ்த்தினர். பின்னர் பலவகை மலர்களாலான மாலையணிந்த தூயோனான கண்ணனுக்கு எனக்கும் காப்புக் கயிறு கட்டினர். இந்நிகழ்வுகளை நான் கனவில் கண்டேன்.
Showering us with sprinkles of the waters,
They chanted the hymns that bestow prosperity upon us,
Then they tied the protective amulets to ward off evil
On me and Krishna, the Divine One, who wears garlands woven with flowers.
I dreamed a dream, O friend!
5. வடமதுரை மன்னன் வரக் கனாக் கண்டேன்
சதிரிள மங்கையர் தாம்வந் தெதிர்கொள்ள,
மதுரையார் மன்ன னடிநிலை தொட்டு,எங்கும்
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்.
பொருள்: தோழீ, பெருமை வாய்ந்த அழகினையுடைய இளம் பெண்கள் சூரியனது ஒளி போன்ற பேரொளியுள்ள குத்துவிளக்குகளையும் பொற்கும்பங்களையும் கையில் ஏந்தி, எதிர்கொண்டு அழைத்துவர, வடமதுரையின் மன்னனாகிய கண்ணன் பாதுகைகளைத் தரித்துக்கொண்டு பூமியெங்கும் அதிரும்படியாக எழுந்தருளுவதை நான் கனவில் கண்டேன்.
With lamps so bright as the shining sun,
Carrying sacred pots made of gold;
The King of Madhura walked with gait so grand,
Grounds shaking with His feet’s touch.
I dreamed a dream, O friend!
6. மதுசூதனன் என் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன்
முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்.
பொருள்: தோழீ, மத்தளம் முதலிய வாத்தியங்கள் முழங்கவும் வரிகளையுடைய சங்குகள் ஒலிக்கவும், மைத்துனன் முறையுடையவனும் நற்குணங்கள் நிறைந்தவனும் மதுசூதனன் என்னும் பெயர் பூண்டவனுமான கண்ணன், முத்து மாலைகள் வரிசையாகத் தொங்கவிடப்பட்ட பந்தலின் கீழே வந்து என் கைகளைப் பற்றிக் கொண்டருள நான் கனாக் கண்டேன்.
And under the canopy hung heavily with strings of pearls,
He came, my Beloved and my Lord,
The vanquisher of the demon Madhu,
And grasped me by the hand.
I dreamed a dream, O friend!
7. கைத்தலம் பற்றித் தீ வலம் வரக் கனாக் கண்டேன்
பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து,
காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி,
தீவலம் செய்யக் கனாக்கண்டேன் தோழீநான்.
பொருள்: தோழீ, வாய்மையுடைய நல்ல வேதியர்கள், பொருத்தமான சிறந்த வேத மந்திரங்களை ஓத, அந்தந்தக் காரியங்களுக்கு இசைந்த மந்திரங்களின்படி, பசுமையான இலைகளையுடைய நாணல் புற்களைப் பரப்பி, சமித்துக்களையிட்டு தீ வளர்க்க, மிக்க சினத்தையுடைய பெருங்களிறு போன்ற கம்பீரம் கொண்ட கண்ணன் என் கையைப் பிடித்துக் கொண்டு அத்தீயினை வலமாகச் சுற்றிவர நான் கனாக் கண்டேன்.
They sang the Vedic songs;
The holy grass was laid all round the sacred fire.
And He who was magnificent like a war elephant in its rage,
He seized my hand and we paced round the Flame.
I dreamed a dream, O friend!
8. அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன்
நம்மையு டையவன் நாராய ணன்நம்பி,
செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி,
அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான்.
பொருள்: தோழீ, இப்பிறப்பிற்கும் இனிவரும் ஏழேழ் பிறவிக்கும் பற்றுக் கோடாய் அடைக்கலம் தருபவனும் நம்மையெல்லாம் தனது உடைமையாகக் கொண்டவனும் சகல நற்குணங்களுடையவனும் நாராயணனுமான கண்ணன், சிறந்த தனது திருக்கைகளாலே எனது காலைப் பிடித்து அம்மியின் மேல் எடுத்து வைக்க, என்னை அம்மி மிதிக்கச் செய்ய, நான் கனாக் கண்டேன்.
We belong to Him as a part of His endless presence,
Such a Supreme One grasped my feet with His Divine hands,
To lift them up on the Metate (Ammi) in affirmation and solemnity of our bond.
I dreamed a dream, O friend!
9. பொரி முகந்து அட்டக் கனாக் கண்டேன்
எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி,
அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து,
பொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.
பொருள்: தோழீ, அழகிய வில் போன்ற புருவத்தையும் ஒளிபொருந்திய முகத்தையுமுடைய எனது தமையன்மார் வந்து அக்கினியை நன்றாக எரியச் செய்து, அந்த அக்கினியின் முன்னே என்னை நிற்கச் செய்தார்கள்; பின்னர், நரசிம்மனாய் சிங்க முகத்தை உடையவனும் அச்சுதனனுமான கண்ணனுடைய திருக்கையின் மேலே என் கையை வைத்து நெற்பொரியை அள்ளியெடுத்து அக்கினியிலிட்டு ஆகுதி செய்வதை நான் கனவில் கண்டேன்.
Presented me in front of the kindled sacred fire.
Achyuta, the Lion faced, His hands placed over mine
We offered puffed rice to the fire-deity.
I dreamed a dream, O friend!
10. மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன்
மங்கல வீதி வலம்செய்து மணநீர்,
அங்கவ னோடு முடஞ்சென்றங் கானைமேல்,
மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான்.
பொருள்: தோழீ, குங்குமக் குழம்பை உடலெங்கும் தடவி, குளிர்ந்த சந்தனச் சாந்தை மிக அதிகமாகப் பூசி, யானையின் மீது கண்ணபிரானோடு சேர்ந்திருந்து, திருமணத்திற்காக அலங்கரிக்கப்பட்ட வீதிகளிலே ஊர்வலமாக வந்து, பின்னர் மணம் கமழும் மங்கல நீரினாலே எங்கள் இருவருக்கும் நீராட்டுவதாக நான் கனவில் கண்டேன்.
We came in a procession around the decorated streets atop an elephant,
And then they showered us together with fragrant water.
I dreamed a dream, O friend!
குறிப்பு:
ஆழ்வார்கள் பன்னிருவர் பாடிய பாசுரங்களை நாதமுனிகள் தொகுத்து நாலாயிரத் திவ்வியப் பிரபந்தமாக அருளினார். அப்பிரபந்தத்திலே கோதையார் என்றும் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்றும் நாச்சியார் என்றும் அழைக்கப்படும் ஶ்ரீ ஆண்டாள் பாடியவை திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்பவை. நாச்சியார் திருமொழி, தையொரு திங்கள் தொடங்கி பட்டி மேய்ந்தது வரையுள்ள பதினான்கு திருமொழிகளைக் கொண்டது. அவற்றில் ஆறாவது திருமொழியாக அமைவது “வாரணம் ஆயிரம்” என்பது.
வாரணம் ஆயிரம் என்னும் இந்தப் பத்துப் பாடல்களும் ‘கலி விருத்தம்’ என்னும் பாவகையைச் சார்ந்தவை.